Pages

Monday 29 February 2016

அப்துல் கலாம் விருது பெற்ற தமிழ் மாணவன்

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, பசுமை கார் கண்டுபிடித்த, அண்ணா பல்கலை மாணவருக்கு, அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா பல்கலையில் உள்ள, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லுாரியில், 'அப்ளைட் சயின்ஸ்' மற்றும் தொழில்நுட்ப பிரிவில், எம்.டெக்., முதலாம் ஆண்டு படிப்பவர், எஸ்.பாலு.


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை சேர்ந்த இவர், சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள் இல்லத்தில், 15 ஆண்டுகளாக தங்கி படித்து வருகிறார். டில்லியில், ஸ்ரீதர்ஷின் கலைக்கூடம் சார்பில், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு ஞானச்சுடர் போட்டி நடந்தது. நாட்டின் பல மாநிலங்களை சேர்ந்த இன்ஜி., கல்லுாரிகள், பல்கலை மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளுடன் பங்கேற்றனர்.இதில், மாணவர் பாலு உருவாக்கிய பசுமை காருக்கு, தேசிய அளவில், 10ம் இடமும், தமிழக அளவில் முதலிடமும் கிடைத்தது.


இந்த கண்டுபிடிப்பை பாராட்டி, பாலுவுக்கு அப்துல் கலாம் நினைவு ஞானச்சுடர் விருது வழங்கப்பட்டு உள்ளது. விருது பெற்ற மாணவரை, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் மற்றும் பதிவாளர் கணேசனும் வாழ்த்தினர். பசுமை காரில் ஒருவர் மட்டும் அமர்ந்து ஓட்டலாம். இதை உள் அரங்க போட்டிகளுக்கு பயன்படுத்த முடியும். இதுகுறித்து, மாணவர் பாலு கூறியதாவது:
பெட்ரோலிய வாகனங்களை விட, 78 சதவீதம் மாசு குறைந்த இந்த காரை, ரயில், பேருந்து நிலையங்கள், உயிரியல் பூங்காக்கள், சிறுவர் பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்த முடியும். அதற்காக, குறைந்த செலவில், 20 பேர் அமரும் வகையிலான காரை, விரைவில் தயாரிக்க உள்ளோம் என்று அவர் கூறினார்.

மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

இரத்தம் குடிக்கும் காதல் ஜோடி

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி, வாரத்திற்கு ஒருமுறை தங்களது இரத்தத்தை தங்கள் ஜோடிகளுடன் பரிமாறிக்கொள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். அமெரிகாவைச் சேர்ந்த அரோ டிராவின், சமூக வலைதளத்தின் மூலமாக லியா பெனின்காப்  என்ற பெண்ணை சந்தித்தார். இவர்களுடைய நட்பு காதலாக மாறி திருமணமும் செய்து கொண்டனர். வாரம் ஒருமுறை இருவரும் மாறி மாறி இரத்தம் குடித்து வருகின்றனர்.


இது குறித்து அரோ - லியா கூறுகையில், வாரத்திற்கு 4 தடவை இதுபோன்று இரத்தம் குடித்து வருகிறோம். உடல் பலவீனமானது போன்ற உணர்வு ஏற்ப்பட்டவுடன் ஒருவர் இரத்தத்தை மற்றவர் மாற்றி குடிப்பதாகக் கூறுகின்றனர்.

மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

போக்கிரி ராஜாவில் பப்ளி ஹன்சிகா

பி.டி.செல்வகுமார் தயாரிப்பில், ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள ‘போக்கிரிராஜா’படத்தில், ஜீவா–ஹன்சிகா ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.  படத்தில், கவிஞர் விவேக் எழுதிய ‘‘பப்ளி...பப்ளி...’’ என்ற பாடல் இடம்பெறுகிறது.


இந்த பாடல் காட்சியை படமாக்கியதில் இருந்து ஹன்சிகாவை படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ‘‘பப்ளி...பப்ளி...’’ என்று செல்லமாக அழைக்கிறார்களாம்!

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Saturday 27 February 2016

மெகா ஃபிக்ஸில்ஸ் என்றால் என்ன ?

ஒரு பிக்சல் என்பது  கணினி மானிட்டர் அல்லது  (டிஜிட்டல் ஸ்க்ரீனில்) காட்சித்திரையில் தெரியும்  காட்சியில்  ஒரு சிறிய சதுர  புள்ளி ஆகும். இவ்வகை திரைகளை ஒரு உருப்பெருக்கி கண்ணாடி மூலம் நோக்கினால் அப்புள்ளிகளை நாம் எளிதாக காணலாம். ஸ்க்ரீனில் புள்ளிகள் அதிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தால்  காட்சி அல்லது படம் மிக தெளிவாக தெரியும்.


இதை நாம் உபயோகிக்கும் செல் போன்களில் தெளிவாக பார்க்கலாம். அதாவது விலை குறைந்த செல்போன் ஸ்க்ரீனில் இந்த கட்டங்கள்  சாதாரண கண்களுக்கே தெளிவாக தெரியும். அதே வேளையில் மிக விலை உயர்ந்த போன்களின் டிஸ்ப்ளேக்களில் இந்த புள்ளிகள் சாதாரண் கண்களுக்கு புலப்படாது. ஆனால் ஒரு உருப்பெருக்கி கண்ணாடியை வைத்து பார்த்தீர்களானால் பிக்சல் எனப்படும் புள்ளிகளை காணலாம். அதாவது ஃபிக்ஸில் எனப்படும் அப்புள்ளிகள் அதிகரிக்க அதிகரிக்க காட்சி அல்லது படம் பளிச்சென்றும் அதிக கவர்ச்சியுடனும் தெரிய ஆரம்பிக்கிறது.

எனவே நாம் வாங்கும் டிஜிட்டல் கேமராக்களில் ஃபிக்ஸில்கள் அதிகமாக இருப்பின் படங்கள் தெளிவாக இருக்கும். ஒரு மில்லியன்  ஃபிக்ஸில்கள்  ஒரு மெகா ஃபிக்ஸில் என்று அழைக்கப்படுகிறது.  உதாரணத்திற்கு 3.1 மெகா ஃபிக்ஸில் கேமராவில்  2048 x 1536 புள்ளிகள் கொண்ட போட்டோவை எடுக்கலாம். அதன் மொத்த புள்ளிகள் 3,145,728 ஃபிக்ஸில் ஆகும். இந்த அளவே 3.1 மெகா ஃபிக்ஸில் என்று அழைக்கபடுகிறது.


தொழில் நுட்பம் வளர வளர அதிக மெகா ஃபிக்ஸில்கள் கொண்ட கேமரா உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. தற்போதைய நிலவரப்படி சாதாரண பயன்பாட்டிற்க்காக  அதிகபட்சமாக 120 MP கேமரா மார்க்கட்டில் கிடைக்கிறது.  இதன் விலை சுமார் 37,000 அமெரிக்க டாலர்களாகும். ஆனால் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட 570 மெகா ஃபிக்ஸில் கொண்ட   Fermilab’s digital camera தான் உலகின் மிக அதிக அளவு மெகா ஃபிக்ஸில் கேமராவாகும்.

மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Friday 26 February 2016

தல 57 ல் மீண்டும் கூட்டணி சேரும் அஜித் - சிறுத்தை சிவா

அஜித் தற்போது ஆபரேஷன் செய்துவிட்டு முழு நேர ஓய்வில் இருக்கிறார். தனது குடும்பத்தினருடன் வெளிநாடு சென்று விடுமுறையை கழித்து வரும் அஜித், அடுத்தாவதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களுக்கு பிறகு சிறுத்தை சிவாவுடன் மீண்டும் அஜித் இணையவிருக்கிறார். இது அஜித் நடிக்கும் 57-வது படமாகும்.


இந்த படம் எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், வருகிற மே மாதம் 1-ந் தேதி அஜித் பிறந்தநாளில் படத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 3 மாதங்களில் படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கும் சரித்திர பின்னணியில் உள்ள படத்தில் இணையவிருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அஜித்தின் 57-வது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அறிவிப்பார்கள் என தெரிகிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

செல்போன் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பு

ஆண்களிடையே மலட்டுத்தன்மையும் அதிகரித்துவருவது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கைபேசிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மற்றும் உஷ்ணசக்தியானது ஆண்களின் விந்தணுக்களை பாதித்து, அவற்றை செயலிழக்க செய்துவிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி புதிய வாரிசை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்கள் தங்களது பேண்ட் பாக்கெட்களில் கைபேசிகளை வைக்காமல் இருப்பதும், பேட்டரி ரீசார்ஜ் செய்யும் வேளைகளில் செல்போன்களை அணைத்து வைத்திருப்பதும் பாதுகாப்பானது என இந்த ஆராய்ச்சி தொடர்பான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதய நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்??

இதய நோய் உள்ளவர்கள் சில அறிகுறிகள் மூலம் அதை புரிந்து கொள்ள முடியும். மூச்சுத் திணறல், தோள்பட்டை வலியுடன் கூடிய மார்பு வலி, நடக்கும்போது, ஓடும்போது, உயரமான பகுதிகளில் ஏறும்போது மார்பு வலி ஏற்படுதல் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள். ஒருவருக்கு தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் படபடப்புடன் மார்பு வலி ஏற்பட்டால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்வது அவசியம். இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் கொழுப்புச் சத்துக்கள் அதிகமாகி ரத்த ஓட்டத்தை தடுப்பதால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது. பொதுவாக இதய நோய் உள்ளிட்ட, எந்த நோயும் நம்மை தாக்காமல் இருக்க தினமும் அரைமணி நேரம் சீரான உடற்பயிற்சி செய்வது நல்லது.


இதய நோயை தவிர்க்க நினைப்பவர்கள் முதலில் புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்த வேண்டும். இது தவிர இறைச்சி, எண்ணெய் பலகாரங்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சமச்சீர் சத்துணவு, போதிய உடற்பயிற்சி, தினமும் நல்ல தூக்கம், ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருத்தல், வருடத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து, சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் கூடியிருந்தால், அதற்குரிய மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் தவறாமல் உட்கொள்வது ஆகியவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்.


அதேநேரம், எந்த சூழலிலும் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருப்பது அவசியம். ஒரே நேரத்தில் பலவகையான சிந்தனைகளில் ஈடுபடுவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. நாம் எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் இருந்தால்தான் நமக்கு நேர்மறையான முடிவுகள் கிடைக்கும். அதேநேரம், சுத்த சைவ உணவு உண்பவர்கள், புகையிலை, மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் இதய நோய் வரலாம். எனவே, மனதை லேசாக வைத்திருக்க வேண்டும். மன உளைச்சல் இதய நோய்க்கு வழிவகுத்துக் கொடுக்கும் என்கிறார்கள். அதே நேரத்தில் இதய வால்வு நோய்கள் வந்தால் அதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே வழி.

நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்கும் "Myshake" அப்பிளிகேசன்

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நிலநடுக்கத்தை கண்டறியும் அப்பிளிகேஷனை உருவாக்கியுள்ளனர். "Myshake" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன், நிலநடுக்கத்தினை crowdsourcing phones மூலம் முன்கூட்டியே கணித்துவிடுகிறது. அதாவது, ஒரு இடத்தில் நிலநடுக்கம் நிகழப்போகிறது என்றால், அந்த இடம் மற்றும் நேரம் அதுமட்டுமின்றி அதன் அதிர்வீச்சு போன்றவற்றை துல்லியமாக ஸ்கேன் செய்து உடனடியாக அது சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தையும் கைப்பேசிக்கு அனுப்பி வைக்கிறது.


60 சதவீதம் வரையிலான ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் கைப்பேசிகள் சுமார் 6 மைல் வரையிலான தூரத்தில் நிகழும் நிலநடுக்கத்தை தரவு(Data) அடிப்படையில், மிகத்துல்லியமாக கணிக்கும் என உறுதியாக கூற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, மக்கள் அந்த அப்பிளிகேசனை தரவிறக்கம் செய்து அதனை பயன்படுத்துவதற்கு முன்பாக, அது பற்றிய தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். கலிபோர்னியாவில் 16 மில்லியன் ஸ்மார்ட் கைபேசி மற்றும் உலக அளவில் 1 பில்லியன் ஸ்மார்ட் போன்களில் இந்த அப்பிளிகேஷன் பொருத்தப்படுவதற்கு மதிப்பிட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டீவ் ஜாப்ஸின் வெற்றி கதைகள்

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த தினம் (பிப்.24). கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், சிறந்த பேச்சாளர். 2005-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது. பட்டமளிப்பு விழாவில் பேசிய ஸ்டீவ் ஜாப்ஸ் "நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்" என்றார். அந்த மூன்று கதைகள் உங்களுக்காக...


முதல் கதை

நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள்தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. பத்து ஆண்டு உழைப்பின் பயனாக, 'மெகின்டோஷ்' கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல் கம்ப்யூட்டர் 'டைப்போகிராபி' (அச்சுக் கலை) கொண்டது.  மேலும் இரண்டு கதைகளை கேட்க, இந்த வீடியோவை கேளுங்கள்...

அணு வெடிப்பு சோதனை-இந்தியா (சிரிக்கும் புத்தர்)

சிரிக்கும் புத்தர் என்பது இந்திய ராணுவத்தில் இன்றும் பிரபலமான வார்த்தைகள். 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் அகிலத்தையே நமது இந்தியா ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய நாள், ஆம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக அங்கம் வகித்த வல்லரசுகள் மட்டுமே செயல்படுத்தக் கூடிய அணுக்கரு வெடிப்பு சோதனையை நிகழ்த்தி உலகத்தையே தமது பக்கம் திருப்பியது இந்தியா. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் என்ற இடத்தில் கனடாவின் உதவியுடன் இந்த சோதனையை இந்தியா நிகழ்த்தி அதற்கு "சிரிக்கும் புத்தர்" என பெயரிட்டது. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 1972 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 அன்று பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி புரியும் இந்திய அணு சக்தி வல்லுனர்களிடம் அவர்கள் வடிவமைத்த ஒரு அணுக்கரு வெடிப்பு சோதனைக் கருவியைத் தயாரித்து பரிசோதனை செய்ய அனுமதி வழங்கினார்.


தனது அணுமின் திட்டத்திற்கு ஆதரவளித்த அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளின் நிபந்தனையை மீறி இந்தியா இதனை நிகழ்த்தினாலும் இந்த சோதனையை "அமைதியான அணுக்கரு வெடிப்பு "எனக் கூறி அவர்களது நிபந்தனையை மீறவில்லை என விளக்கம் அளித்தது இந்தியா. சுற்றிலும் சீனா, பாகிஸ்தான் போன்ற எதிரிகளை எச்சரிக்கும் வகையிலேயே இந்த அணு வெடிப்பு நடத்தப்பட்டது என்று மேலை நாடுகள் கூறியது. எனினும் இந்தியா இந்த திட்டத்தை மிக ரகசியமாக மேற்கொண்டு வெற்றிகரமாக நடத்தியது. இதன் மூலம் ராணுவ பலத்தில் நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்றும் காட்டியது. ராஜா ராமண்ணாவின் தலைமயிலான மொத்தமே 75 பேரைக் கொண்ட குழு இந்த சிரிக்கும் புத்தர் என்னும் அணு வெடிப்பு சோதனை ஆயத்தங்களில் ஈடுபட்டது.


இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமும் ஒருவர் ஆவார். புத்தரின் பிறந்தநாளான புத்த பூர்ணிமாவில் செய்யப்பட்ட இந்த சோதனையால் உலக நாடுகள் இந்தியாவிடம் சிறிது அச்சம் கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை,மேலும் இதனை எதிர்த்து கனடா அரசு இந்தியாவுடனான உறவை முறித்துக் கொண்டது. அமைதியான அணுக்கரு வெடிப்பு’ என்று பெயரிட்டதன் மூலம் இந்த நிபந்தனையை மீறவில்லை என்று இந்திய அரசு அறிவித்தது. புத்தர் சிரித்தார் என்னும் அடையாள சொல்லுடன் இந்தியாவில் முதன் முதலாக அணு வெடிப்பு சோதனை நிகழ்ந்த தினம் May 18.

‘சண்டை கோழி’இரண்டாம் பாகம் கைவிடப்பட்டது!


‘சண்டை கோழி’ படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்படுவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

2006-ம் ஆண்டு லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த விஷாலின் இரண்டாவது படம் ‘சண்டை கோழி’. மீராஜாஸ்மின் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தை விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியே தயாரித்திருந்தார்.

இப்போது லிங்குசாமி ‘ரஜினிமுருகன்’ படத்தை ரிலீஸ் செய்து பல பிரச்சினைகளில் இருந்து ரிலாக்ஸாகியிருக்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு ‘ரஜினி முருகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே ‘சண்டை கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

இதனை ஏற்று விஷாலும் லிங்குவுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார். இப்போது விஷால் ‘மருது’ படத்தில் நடித்து வருவதால் அது முடிந்தவுடன் நேரடியாக ‘சண்டை கோழி’க்கு வருவதாகவும் சொல்லியிருந்தார்.


இந்த நேரத்தில் இன்றைக்கு பிரபல சாமியாரான ரவிசங்கரை பெங்களூரில் தனது தந்தையுடன் சென்று சந்தித்து ஆசி வாங்கிய விஷால், அங்கிருந்தே டிவீட்டரில் போட்ட ஒரு செய்தி ‘சண்டை கோழி’ செய்தியை ஒரு கனவாக்கிவிட்டது.

விஷால் தன் ட்வீட்டில் “சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணியின் மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. எனவே சண்டைக்கோழி படம் கைவிடப்படுகிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.

விஷால் இந்தச் செய்தியில் கண்டித்திருப்பது இயக்குநர் லிங்குசாமியைத்தான் என்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது. ஏற்கெனவே பல பணச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் லிங்குசாமிக்கு இந்தப் படத்தையும் தானே தன் பேனரிலேயே தயாரிக்க வேண்டும் என்று நிரம்ப ஆசை.

இதற்கேற்றாற்போல் பைனான்ஸ், கடன் என்று விஷாலின் பெயரை முன் வைத்து லிங்குசாமி எடுத்த அனைத்துவித முயற்சிகளையும் விஷால் விரும்பவில்லையாம். ஏற்கெனவே ஜெமினி லேப் தயாரிப்பில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ இன்னமும் ரீலீஸாக முடியாமல் தவியாய் தவிக்கிறது.

இந்த நேரத்தில் லிங்குவின் தொடர்ச்சியான இந்த கடன் வாங்கும் பிரச்சினையால் இந்தப் படமும் தொங்கலில் நின்றால், அது தனக்குத்தானே குழி வெட்டிக் கொள்வதற்கு சமம் என்பதை உணர்ந்துதான் விஷால் தைரியமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தகவல். இயக்குநர் லிங்குசாமி இதற்கென்ன கவுண்ட்டர் அட்டாக் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை..

Wednesday 24 February 2016

உயரும் கடல்நீர் மட்டத்தால் உலகம் அழிய போகிறதா?

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடல்நீர் மட்டம் 14 செ.மீ வரை உயர்ந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள புவி மற்றும் கோள் அறிவியல் துறை சார்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக புவி வெப்பம் குறித்தும், கடல்நீர் மட்டம் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.


ஆய்வு தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், கடந்த 35 ஆயிரம் ஆண்டுகளின் கடல் நீர் மட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கடந்த 6,000 ஆண்டுகளாக கடல் நீர் மட்டத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை, ஸ்திரமாகவே இருந்தது. ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன், கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்படத் துவங்கியது.

இத்தகைய மாற்றத்தை 150 ஆண்டுக்கு முந்தைய பதிவுகளில் காண முடியவில்லை. கடல் அலைகளின் உயரமும், முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து உள்ளது. கடல் மட்டம் உயர்வதற்கும், வெப்பநிலை உயர்வதற்கும் தொடர்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

விண்வெளியில் ஒலித்த அபூர்வ இசை !


பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான விண்வெளிப் பயணத்தின்போது இனம்புரியாத, மனதை மயக்கும் புதுவித இசையை சில விண்வெளி வீரர்கள் கேட்க நேர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1969ம் ஆண்டு பூமியில் இருந்து சந்திரனுக்கு அப்போலோ- 10 விண்கலத்தின் மூலம் பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்களான ஜான் யங், தாமஸ் ஸ்டாப்போர்ட் மற்றும் யூகேன் கெர்னன் ஆகியோர் அந்த அபூர்வ இசையை கேட்டு, அதுதொடர்பாக பேசிக் கொண்ட தகவல்களை நாசா பதிவுசெய்து வைத்துள்ளது.

இரு தொலைத்தொடர்பு இயந்திரங்களுக்கு இடையில் ஏற்படும் ஒலிகாந்த ஈர்ப்புகூட இதைப்போன்ற இசைவடிவில் கேட்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், சனி கிரகத்தில் உள்ளதைப்போல் சந்திரனில் புவிஈர்ப்பு மற்றும் மின்காந்த அலைகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


1969-ம் ஆண்டு சந்திரனில் முதன்முதலில் காலடி பதித்த அமெரிக்க விண்வெளி வீரரான நீல் ஆர்ம்ஸ்டிராங், மசூதிகளில் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கொலியைப் போன்ற சப்தத்தை தனது விண்வெளிப் பயணத்தின்போது சந்திரனில் கேட்க நேர்ந்ததாக பல ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவித்திருந்தார்.

அப்போது, அது என்ன சப்தம்? என்பதை அறியாமல் இருந்த ஆர்ம்ஸ்டிராங், பூமிக்கு திரும்பிய பின்னர் எகிப்துக்கு சென்றிருந்தபோது அதே சப்தத்தை அங்கு கேட்க நேரிட்டது. அது என்ன சப்தம்? என்று தனது அருகில் இருந்த நண்பரை ஆர்ம்ஸ்டிராங் கேட்டதாகவும், தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் பாங்கொலியின் சப்தம் என அந்த நண்பர் தெரிவித்ததாகவும், இதையடுத்து, ஆர்ம்ஸ்டிராங் இஸ்லாமிய மதத்தை தழுவியதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.

மேலும் இது போன்ற பல சுவாரசியமான தகவல்களை தமிழில் கேட்பதற்கு முகில் ஆன்லைன் ரேடியோவை கேளுங்கள்

முதலிடம் பிரிட்டிஷ் ஏர்வேஸ்கே

2016ஆம் ஆண்டுக்கான  சிறந்த  பிராண்டுகளின் தரவரிசை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நுகர்வு, வணிகம் இரண்டு பிரிவுகளின் சிறந்த பிராண்டுகள் பட்டியல் இடம்பெற்றுள்ளன. 2500 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்  அடிப்படையில் தர வரிசை வெளியிடப்பட்டது.1600 போட்டியாளர்களின் நடுவே பிரிட்டிஷ் ஏர்வேஸ் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தான் முதல் இடத்தை பிடித்து வருகிறது. நுகர்வு, வணிகம் இரண்டிலும் இது தான் முதலிடம்.


இதனைத்தொடர்ந்து ரொலெக்ஸ் வாட்ச் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. லோகோ மூன்றாவது இடத்தையும், டைசன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் 7ஆவது இடத்திலும் கூகுள் 16ஆவது இடத்திலும் அமேசான் 19ஆவது இடத்திலும் உள்ளது. முதல்முறையாக BBC முதல் 20 இடத்தை தாண்டி வெளியே உள்ளது. கடந்த வருடத்தில் நான்காவது இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் பின்னுக்கு தள்ளப்பட்டது.

இளையராஜா ஆயிரம்

இளையராஜா ஆயிரம் என்ற பெயரில் பிப்ரவரி 27 ஆம் தேதி இளையராஜாவுக்கு நடக்கும் பாராட்டு விழா மற்றும் இசை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஆகியோர் பங்கேற்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இளையராஜா மியூசிக்மேனேஜ்மெண்ட் நிறுவனமும் விஜய் தொலைக்காட்சியும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. தென்னிந்திய திரையுலகமே இதில் பங்கேற்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமிதாப்பச்சனையும் விழாவில் கலந்துகொள்ள அழைத்துள்ளனர். ஏற்கெனவே மும்பையில் இயக்குநர் பால்கி நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்று இளையராஜாவை பாராட்டியவர் அமிதாப்.


சென்னையில் நடக்கும் பாராட்டு விழாவிலும் பங்கேற்க அமிதாப் ஒப்புதல் தெரிவித்துள்ளாராம். ரஜினியும் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள். கமல் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். திட்டமிட்டபடி சென்னை வந்துவிட்டால் அவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். இவர்களோடு மலையாள முன்னணி நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோரையும் அழைத்திருக்கிறார்களாம். தெலுங்குத் திரையுலகம் மற்றும் கன்னடத் திரையுலகத்திலிருந்தும் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர். திட்டமிட்டபடி இவர்கள் அனைவரும் பங்கேற்றால் இந்திய திரையுலகமே இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுத்த மாதிரி ஆகிவிடும்.

ஜப்பானை சுற்றி பார்க்கலாம் வாங்க

உழைப்பினால் மனிதர்கள் உயருவர். நாடும் உயர முடியும் என்று காட்டிய உன்னத நகரம் டோக்கியோ. அது ஜப்பானின் தலைநகரம். ஹொன்ஷு,கொக்கைடோ, கியூஷு, ஷிக்கோக்கோ எனும் நான்கு பெருந்தீவு களின் சேர்க்கைதான் ஜப்பான். குட்டிநாடுதான் ஆனால், மின்னணுத் துறையில் உலகிற்கே வழிகாட்டிய நாடு அது இத்தனைக்கும் மன்னராட்சி உடைய நாடு.  அரச குடும்பத்தினரைக் கடவுள் என ஜப்பானியர் போற்றுகின்றனர். அதனால் அரண்மனையை அவர்கள் கடந்து செல்கையில் சாலையில் சென்றாலும் வணங்குவர். அரண்மனைக்கு நிஷுபாஷி என்னும் இரட்டைப் பாலம் வழியே செல்ல வேண்டும்.



பாரிஸ் நகரின் ஈஃபிள் கோபுரத்தை முன் மாதிரியாக வைத்து கட்டப்பட்ட டோக்கியோ கோபுரம் 333 மீட்டர் உயரத்தில் 4000 டன் எடையில் நகரின் மய்யத்தில் உள்ளது.  இரவு பதினொரு மணி வரை விளக்குகளால் ஜொலிக்கிறது. தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் தொடர்பு சாதனமாகவும் பயன்படுகிறது. ஹசிகோ என்பது ஒரு நாயின் பெயர். இந்நாய் தினமும் காலை முதல் மாலை வரை டோக்கியோ இரயில் நிலையங்களில் ஒன்றான ஷிடியா ரயில் நிலையத்தில் காத்திருக்குமாம். அந்த உரிமையாளர் இறந்த பிறகும் பல வருடங்கள் காத்திருந்ததாம். எனவே அந்நாயைப் போற்றும் வகையில் ஹசிகோவின் சிலை உள்ளது.

பிரெஞ்சு உணவு பற்றிய சுவாரசிய தகவல்கள்

பிரெஞ்சு உணவு பழக்கவழக்கம், உணவு உண்ணுதல் என்பதையும் தாண்டி.... இது ஒரு பாரம்பரிய செயல்பாடு. இதனாலேயே பிரெஞ்சு உணவுகளும் சரி, அது பரிமாறப்படும் விதமும் சரி.. பிரான்ஸ் தாண்டியும் பிரபலம். இன்று பிரெஞ்சு உணவு பற்றி சில சுவையான செய்திகளை தெரிந்து கொள்வோம். பிரெஞ்சு உணவுகளில், நத்தை உணவு மிகவும் பிரபலம். வருடம்தோறும் 500 மில்லியன் நத்தைகள் இங்கு சாப்பிடுகின்றனர். உலகில் மிகப்பெரிய விவசாய உணவு ஏற்றுமதியில், இரண்டாவது இடம் பிரான்சுக்கு. அமெரிக்காவை விட, பிரான்சில் 'மக் டொனல்ட்' உணவகங்களின் விலை இரண்டு மடங்கு அதிகமாம்.


காரணம் இங்கே விவசாய உற்பத்தியில் தான் இதன் சுவை மேருகேற்றப்படுகிறதாம். பிரெஞ்சு நாடு, தன் மக்களுக்கு எல்லா நாட்டு வகை உணவுகளையும் ருசி பார்க்க சந்தோஷமாக அனுமதி வழங்கியிருக்கிறது. உலகின் அத்தனை ருசியான உணவு வகைகளையும் நீங்கள் பிரான்சில் இருந்தே ருசித்து சாப்பிடலாம். சீனாவின் பாம்பு நூடுல்ஸில் இருந்து, தமிழ்நாட்டு அடையார் ஆனந்தபவன் சைவ உணவு வரை இங்கு, பலவித உணவு விடுதிகள் உண்டு. மெக்ஸிகன் உணவு வகைகளை தேடிப்பிடித்து உண்ணுவது ஒரு கலையாம் பிரெஞ்சு மக்களுக்கு ......

நாற்காலியில் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் பல்லிகள்

நமக்கு பல்லிகளை பார்த்தாலே பயமாகவும் அறுவறுப்பாகவும் இருக்கும். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஹென்ரி என்பவர் பல்லி மீது அதிகளவு அன்பு, ஆர்வம் கொண்டவர். பல்லியின் மீது இருந்த அன்பினால் தன் பெயரோடு லிஸார்ட் என்று சேர்த்து கொண்டார். அவர் ஹில்ஸ் கஃபே என்ற ஹோட்டல் ஒன்று நடத்தி வருகிறார். அங்கு வித விதமான பச்சை பல்லிகள் வளர்க்கிறார்.


அந்த பல்லிகள் குட்டி சோபாவில் படுத்துக்கொண்டு அனைவரையும் பார்த்துக்கொண்டிருக்கும். யார் என்ன செய்தாலும் அது ஒன்றுமே செய்யாதாம். 50 விதமான பல்லிகளை வீட்டில் வளர்க்கிறார். அதை போட்டோ எடுத்துக்கொண்டு அதனுடன் விளையாடுகிறார். பல்லி மாதிரி ஒரு அமைதியான அற்புதமான பிராணி இருக்க முடியாது என்று கூறுகிறார். இதை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். பல்லிகள் அற்புதமானவை என்பதைக் காட்டுவதே என் நோக்கம்’’ என்கிறார் ஹென்றி.

Tuesday 23 February 2016

5G மொபைல் நெட்வொர்க்

செல்போனில் சினிமா படங்களும் வீடியோ காட்சிகளும் அதிகளவில் டவுன்லோட் செய்யப்படுகின்றன. 4G தொழில்நுட்பத்தில் படங்கள் டவுன்லோட் மற்றும் அப்லோட் செய்ய 8 நிமிடங்கள் ஆகும். ஆனால் ஒரு படத்தை 5 வினாடியில் டவுன்லோட் செய்ய முடியும். இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில் உள்ள SURREY பல்கலைகழக நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


அதிவேக தொழில்நுட்பத்தில் மொபைல் இன்டர்நெட்டை உருவாக்கியுள்ளனர். இது தற்பொழுது உள்ள இன்டர்நெட்டின் வேகத்தை விட 100 மடங்கு அதிகமானது. இதனை 5G என்று அழைக்கிறார்கள். இதனுடனான wireless தொழில்நுட்பம் 2018ஆம் ஆண்டு தான் முற்றிலும் முடிவடையும். இதன்மூலம் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பம் மூலமாக பல்வேறு வசதிகளை பெற முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாய்களை வளர்க்க விரும்பும் இங்கிலாந்து ராணி

இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு 90 வயதாகிறது. அவர் நாய்கள் மீது மிகவும் பிரியமானவர். தற்பொழுது உயர் ரக 30 நாய்களை ராஜ உபச்சாரத்துடன் பார்த்துக்கொள்கிறார். இதற்கு சத்தான உணவுகளை மட்டுமே கொடுக்கிறார். உணவாக முயல், கோழிகளை வெள்ளித்தட்டில் கொடுக்கிறார். ஹோமியோபதி, மூலிகையை உணவில் சேர்த்து கொடுக்கிறார். நோயின்றி ஆரோக்கியமாக வளர்க்கிறார். எலிசபெத்தின் 18ஆவது பிறந்த நாளுக்கு அவரது பெற்றோர் நாய் ஒன்றை பரிசாக அளித்தனராம். அதிலிருந்து நாய் மீது அதிக அன்பு காட்டியுள்ளார்.

கச்சத்தீவு மீட்கப்படாதா??

கட்சத்தீவை மீண்டும் இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று இலங்கை ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்து இலங்கை உடன்படிக்கை படி கச்சத்தீவு இலங்கைக்கு உரியது என்றார். மேலும் மீனவர்களின் பிரச்சனையை இரு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். எனவே கச்சத்தீவு இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று முடிவாக கூறி விட்டார்.


106 வயது பெண்மணியுடன் ஒபாமா நடனமாடினாரா??

106 வயது பெண்மணியுடன் ஒபாமா வெள்ளை மாளிகையில் நடனமாடினார். விர்ஜினா என்ற 106 வயது பெண்மணி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதியை பார்ப்பதுதான் தன் ஆசை என கூறி இருந்தார். அந்த விஷயம் ஊடகங்கள் வழியாக இப்போது தான் வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளது.


அதனால், ஒபாமா மற்றும் அவரது மனைவி இருவரும் அந்த பெண்மணியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து அவரை வரவேற்று அவருடன் இருவரும் நடனமாடி மகிழ்ந்தனர். அந்த பெண்மணி கருப்பின வரலாற்றை கொண்டாடுவோம் என சொல்லி நடனமாடினார்.

மாசுக்காற்றை சுவாசித்தால் உடல் பருமனா??

அமெரிக்க டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் எலி ஒன்றை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். சீனாவில் பெய்ஜிங் நகரத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் காற்றில் அதிக அளவு மாசு கலந்துள்ளது. அங்கு வசிக்கும் கர்பிணி எலியை ஆராய்ச்சி செய்ததில், எலிகளின் நுரையீரல் மற்றும் கல்லீரலில் வீக்கமும் அலர்ஜியும் ஏற்பட்டது. உடலில் கொழுப்பு அதிகரித்து எடை அதிகரிக்கப்பட்டது. இன்சுலின் பிரச்சனையால் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. மாசு கலக்காத காற்றை சுவாசித்த எலியை வைத்து சோதித்ததில் எந்த குறைபாடும் எலிக்கு இல்லை. எனவே மாசு கலந்த காற்றை சுவாசித்தால் உடலில் எடை கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


சிவனடி பாத மலையில் மக்கள் கூட்டம்

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகளவு பக்தர்கள் சிவனடி பாத மலைக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்குள் பத்து லட்சத்துக்கு மேலான பக்தர்கள் வருகை தந்துள்ளனராம். எனினும் பிற்பகலுக்கு மேல் இன்னும் அதிகரிக்கக்கூடும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Want to Share This News With Friends?

Quick Search