1969ம் ஆண்டு பூமியில் இருந்து சந்திரனுக்கு அப்போலோ- 10 விண்கலத்தின் மூலம் பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்களான ஜான் யங், தாமஸ் ஸ்டாப்போர்ட் மற்றும் யூகேன் கெர்னன் ஆகியோர் அந்த அபூர்வ இசையை கேட்டு, அதுதொடர்பாக பேசிக் கொண்ட தகவல்களை நாசா பதிவுசெய்து வைத்துள்ளது.
இரு தொலைத்தொடர்பு இயந்திரங்களுக்கு இடையில் ஏற்படும் ஒலிகாந்த ஈர்ப்புகூட இதைப்போன்ற இசைவடிவில் கேட்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், சனி கிரகத்தில் உள்ளதைப்போல் சந்திரனில் புவிஈர்ப்பு மற்றும் மின்காந்த அலைகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1969-ம் ஆண்டு சந்திரனில் முதன்முதலில் காலடி பதித்த அமெரிக்க விண்வெளி வீரரான நீல் ஆர்ம்ஸ்டிராங், மசூதிகளில் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கொலியைப் போன்ற சப்தத்தை தனது விண்வெளிப் பயணத்தின்போது சந்திரனில் கேட்க நேர்ந்ததாக பல ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவித்திருந்தார்.
அப்போது, அது என்ன சப்தம்? என்பதை அறியாமல் இருந்த ஆர்ம்ஸ்டிராங், பூமிக்கு திரும்பிய பின்னர் எகிப்துக்கு சென்றிருந்தபோது அதே சப்தத்தை அங்கு கேட்க நேரிட்டது. அது என்ன சப்தம்? என்று தனது அருகில் இருந்த நண்பரை ஆர்ம்ஸ்டிராங் கேட்டதாகவும், தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் பாங்கொலியின் சப்தம் என அந்த நண்பர் தெரிவித்ததாகவும், இதையடுத்து, ஆர்ம்ஸ்டிராங் இஸ்லாமிய மதத்தை தழுவியதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.
மேலும் இது போன்ற பல சுவாரசியமான தகவல்களை தமிழில் கேட்பதற்கு முகில் ஆன்லைன் ரேடியோவை கேளுங்கள்
No comments:
Post a Comment