Pages

Tuesday 1 March 2016

சூர்யாவுக்கு பயப்படும் தெலுங்கு நடிகர்கள்

தொடர் வெற்றிகளால் தமிழ் சினிமாவின் வசூல் ஹீரோக்களில் ஒருவராக திகழும் சூர்யாவின் படங்கள் தமிழ் மட்டும் இன்றி, ஆந்திர மாநிலத்திலும், வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்று வருகிறது. இதனால் சூர்யா, நடிக்கும் அனைத்து படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில், சூர்யா படங்கள் ஆந்திராவில் வெளியாகிறது, என்றால், அங்குள்ள முன்னணி ஹீரோக்கள் கூட தங்களது படங்களை வெளியிட பயந்து தள்ளிவைப்பார்கள், என்று கூறியுள்ள நடிகர் நாகர்ஜுனா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இடங்களில் சூர்யா படங்களுக்கு தனி மார்கெட் இருக்கிறது, என்றும் தெரிவித்தார்.


இது குறித்து மேலும் பேசிய அவர், ”நான் சென்னையில் பிறந்தவன்.எனவே நானும் சென்னைக்காரன் தான். இந்தப் படத்தில் நடித்தது சிறப்பான அனுபவம். கார்த்தியும் நானும் மனதளவில் இந்தப் படத்துக்குப் பிறகு மிகவும் நெருங்கி விட்டோம். படத்தில் நான் முழுக்க சக்கர நாற்காலியிலேயே உட்கார்ந்து இருக்கும் கேரக்டர். என்னை உட்கார வைத்து விட்டு கார்த்தியும் தமன்னாவும் நிறைய டான்ஸ் ஆடி இருக்கிறார்கள். அப்போது எனக்கும்  எழுந்து ஆட வேண்டும் போல இருக்கும்.


இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா? சூர்யாவுக்கு ஆந்திராவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. குறிப்பாக தெலுங்கானாவில் இருக்கும் ரசிகர் படை அவரது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல. சூர்யாவின் படம் தெலுங்கில்  டப்பிங் ஆகி வருகிறது என்றால் தெலுங்கு ஹீரோக்கள் பயந்து போய் தங்கள் படத்தின் ரிலீசை தள்ளி வைப்பார்கள். அவ்வளவு பெரிய மாஸ் அவர். அவரது அடுத்த படம் 24- என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search