Pages

Thursday 3 March 2016

பிரதமரை விட அதிகம் சம்பாதிக்கும் பிச்சைகாரர்

பிரிட்டிஷ் பிரதமருக்கு சமமாக சம்பாதித்து வரி கட்டாமல் தலைமறைவாக வாழும் பிச்சைக்காரர் ஒருவரைப் பற்றிய செய்தி தற்போது பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு வரி கட்டாமல் வாழும் மக்களின் வருமானத்தை கணக்கிட்டால் 12 மாதங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் பவுண்ட்ஸ் அதாவது 20 கோடியே 47 லட்சத்து 13 ஆயிரத்து 446 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்கள்.


இந்த பிச்சைகாரர் ஒருநாளில் 500 பவுண்ட்ஸ் அதாவது 78 ஆயிரத்து 735 ரூபாய். ஒருவாரத்தில் அவர் சம்பாதிக்கக் கூடியது 2 ஆயிரத்து 500 பவுண்ட்ஸ் அதாவது 3 லட்சத்து 93 ஆயிரத்து 683 ரூபாய். இங்கிலாந்தில் ஹாம்டன் நகரில் வசிக்கும் பிச்சைக்காரர் ஒருவரின் வருமானத்தை கவுன்சிலர் மூலம் தெரிந்திருக்கிறார்கள். அந்த பிச்சைக்காரர் பிச்சை எடுக்கும்போது தனக்கு வீடு, வாசல், மனைவி, சொந்தம் என யாரும் இல்லை என்று எழுதிய அட்டையை தனக்கு முன்பாக வைத்திருப்பார். ஆனால் பல லட்சம் மதிப்புள்ள வீட்டில் இரகசியமாக வாழ்ந்திருக்கிறார். வசதி படைத்த இவர் இளகிய மனம் படைத்தவர்களையே குறி வைத்து பிச்சையெடுத்து வந்துள்ளார். இதுபோன்ற பெருந்தன்மையான மக்களை  வைத்து அதிக அளவில் வருமானம் ஈட்டியுள்ளார்.


இவரைப் போன்றவர்களை நீதிமன்றத்தில் வைத்து கட்டுப்பாடான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்னும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஒரு பிச்சைக்காரர் நாட்டின் சராசரி குடிமகனைவிட ஆண்டு வருமானம் அதிகம் இருக்கும் என்றால் கண்டிப்பாக பிச்சையெடுக்கும் தொழிலை ஒழிக்க முடியாது. மேலும் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து நாட்டிற்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரது கருத்தாகும்.

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search